சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும்
" ஆக"
உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் அகற்றும் அரசுதான் சமூக நீதி அரசு என்று பிரச்சாரம் செய்து நம் மக்களின் வாக்கு பெற்று ஆட்சி அமைத்த அரசாங்கம்!
அரசு ஊழியர்களை விட தனியார் ஒப்பந்த ஊழியர்களே சிறப்பாக வேலை செய்வார்கள் என்ற முன்பின் அரசாங்கத்தின் முடிவுகள் எளிய மக்களின் வாழ்வில் கை வைக்கும்.
பேச்சுவார்த்தையில் தனியாரிடம் இருப்பது நலமே, PF, Insurance, பண்டிகை கால பரிசுகள் கிடைக்கும் என்று கூறுவது எவ்வளவு அபத்தம்.
தேர்தல் நேரத்திலும் இவ்வளவு வன்மையாக நடந்து கொள்ளும் அரசாங்கத்திற்கு அந்த தனியார் மூலம் எவ்வளவு கொள்ளை லாபம் வரும் என்பதை யோசிக்க தோன்றுகிறது.
முட்டுக் கொடுப்பவர்கள் அதிமுக அரசாங்கமே இதை கொண்டு வந்துவிட்டது என்று மழுப்பல் பதில்கள் சொல்வது அதே திட்டத்தை ஏன் திமுகவும் பின் தொடர வேண்டும் என்ற எளிய கேள்வியை முன் வைப்பதே இல்லை.
தூய்மை பணியாளராக இருப்பவர்கள் பெரும்பாலும் தலித் மக்களாக இருப்பதே இதற்கு காரணம்!
பொதுவான அமைச்சர் குறிப்பிட்ட மீடியாவின் கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறுவேன்,நீங்க எல்லாம் யார் என்று கேட்பது எத்தகைய ஊடக அறம்?
கூலி திரைப்படத்தை பார்த்தோம் ரசித்தோம் என கருத்து வெளியிடும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூலிக்காரர்களுக்கு மட்டும் மேயர் பிரியாவையும் அமைச்சர் சேகர் பா பாபுவையும் முன்னிறுத்துவது ஏன்?
தலித் மக்கள் சார்ந்த எந்த பிரச்சனையானாலும் குறிப்பிட்ட அமைப்புகள் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்பது போல், சித்தரிக்க நினைப்பது வன்மையாக கண்டனத்திற்கு உரியது.
எப்பொழுதுமே தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறையும் போராட்ட அடக்குமுறையும் மிகக் கொடுமையானதாகவே இருந்து இருக்கிறது. அதற்கு மாற்று சமூகத்தினர் மாற்று சமூக அமைச்சர் குரல் கொடுக்கும் பொழுது முதலமைச்சருக்கு அந்த மக்கள் மீது தரிசனம் இருக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவதும் சாதிய மனநிலை காரணம் அவர்கள் போராட்டம் உரிமைக்கு முதலாளியின் தரிசனத்திற்கு இல்லை உழைப்புக்கேற்ற ஊதியமும் பணி நிரந்தரமும் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நிம்மதியாக சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்!
-செல்லா செல்லம்
14-08-25

No comments:
Post a Comment