கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்ற மனப் போராட்ட சோதனையை கோயில்களை விட மருத்துவ மனைகள்தான் அதிகம் உசுப்பிவிடுகின்றன!
நூறு புத்தகங்கள் தட்டி எழுப்பும் மனநிலையை ஒருநாள் மருத்துவமனை வாழ்க்கை எழுப்பிவிடுகிறதென்றால், மருத்துவமனைகள்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தவை !
எல்லாம் உயிர் பயம்!
இறைவன் இருக்கென்று நுழைந்தவன் இல்லை என்கிறான்!
இல்லையென்றவன் இருக்கென்கிறான்!
எத்தனை நம்பிக்கை தடுமாற்றங்கள்!
பாவம் நடுநிலைவாதிகள்தான் , விழிபிதுங்குகிறார்கள் எந்தப்பக்கம் சாய்வதென்று புரியாமல்!
-செல்லா செல்லம்
12-08-2019

No comments:
Post a Comment