Saturday, November 30, 2024

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

 கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்ற மனப் போராட்ட சோதனையை கோயில்களை விட மருத்துவ மனைகள்தான் அதிகம் உசுப்பிவிடுகின்றன!


நூறு புத்தகங்கள் தட்டி எழுப்பும் மனநிலையை ஒருநாள் மருத்துவமனை வாழ்க்கை எழுப்பிவிடுகிறதென்றால், மருத்துவமனைகள்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தவை !


எல்லாம் உயிர் பயம்! 



இறைவன் இருக்கென்று நுழைந்தவன் இல்லை என்கிறான்!

இல்லையென்றவன் இருக்கென்கிறான்!

எத்தனை நம்பிக்கை தடுமாற்றங்கள்!


பாவம் நடுநிலைவாதிகள்தான் , விழிபிதுங்குகிறார்கள் எந்தப்பக்கம் சாய்வதென்று புரியாமல்!


-செல்லா செல்லம்

12-08-2019






No comments:

சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும் " ஆக" உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் ...