Wednesday, December 30, 2020

சுயாதீனம்! - kavidhai

 சுயாதீனம்!


வழிநெடுக வழிநெடுக பலர் தோன்றுவர்

வாழ்வென்னும் பயணத்தில் பலர் தோன்றுவர்

வழிநெடுக வழிநெடுக பலர் தோன்றுவர்

வாழ்வென்னும் பயணத்தில் பலர் தோன்றுவர்

பலி கொடுக்க பழி கொடுக்க அவர் தூண்டுவார்


குறை என்றும் பாராமல் பிழை என்றும் பாராமல்

உன் வாழ்க்கை அவர் வாழ வழி வேண்டுவார்

விதை என்றும் பாராமல் கதை என்றும் கூறாமல்

அவர் வாழ்க்கை நாம் வாழ குழி தோண்டுவார்


உன் வாழ்க்கை நீ வாழு! உன் உணர்வோடு போராடு!

உன் வேட்கை நீ ஓடு! ஒரு நாளும் தோற்காது!

தோற்றாலும் அதிலுள்ள சுகம் வேறடா!

உன் தேவை நீ கண்டு உளமாற நீ கொண்டு

உறங்காமல் நீ கொஞ்சம் நடைபோடடா…

நம்மாளே ஆகாது பிறர் துன்பம் நீங்காது 

சொன்னாலே தீராது வரும் இன்பதான்


படிச்ச வேலைக்கும் கிடைச்ச வேலைக்கும்

புடிச்ச வேலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு


தக தகத தகத தகதக ததான்

தக தகத தகத தகதக ததான்

சுயாதீனம்! சுயாதீனம்! சுயாதீனம்! சுயாதீனம்!


-செல்லா செல்லம்.


14-03-18 இரவு 11.30 மணி






6 comments:

Anonymous said...

🔥🔥🔥

Anonymous said...

Semmaaa!!

Anonymous said...

😍😍💫💫

Unknown said...

Veri thanam 💥

Visalatchi said...

Super👌👌

ஆர்த்தி சந்திரசேகர் @ நிலவினி said...

சுயாதீனம் 🔥🔥🔥🔥சுயாதீனம் 🔥🔥🔥

சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும் " ஆக" உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் ...